News October 27, 2025
ராம்நாடு: கண்மாயில் விழுந்து முதியவர் உயிரிழப்பு

ராமநாதபுரம், பரமக்குடி அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (75). இவர் ஜோதிட தொழில் பார்த்து வருகிறார். இவர் நேற்று கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்த அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
தெற்கு ஆசிய தடகளப் போட்டியில் பரமக்குடி மாணவர் சாதனை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 4வது தெற்கு ஆசிய சீனியர் தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அசுகரன் விளையாட்டுக் கழக வீரர் சரண்மேகவர்ணம் இந்திய அணியின் சார்பாக கலந்து கொண்டு 4*400M தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற சரண் மேக வர்ணத்தை அசுர விளையாட்டுக் கழக பயிற்சியாளர் அருண் மற்றும் சக வீரர்கள் பாராட்டினர் .
News October 27, 2025
இராமநாதபுரத்தில் நவ.07-ல் மீனவர்கள் குறைதீர் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவ.07 மதியம் 3:30 மணியளவில் மீனவர்கள் குறை கேட்பு கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். எனவே மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 27, 2025
ராம்நாடு: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
1. பணியிடங்கள்: 258
2. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
3. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
4. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
5. கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


