News February 11, 2026
ராம்நாடு: ஒரே நாளில் இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் வயதானவர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களின் செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 14, 2026
இராம்நாடு: சிவராத்திரியை முன்னிட்டு அரசு அறிவிப்பு

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 9 கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமிகோவில், விருத்தாச்சலம் விருத்தகிரீசுவரர் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்களில் சிவராத்திரி விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. *SHARE
News February 14, 2026
இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.ராமநாதபுரம்- 9445000363
2.ராமேஸ்வரம்- 9445000364
3.திருவாடானை- 9445000365
4.பரமக்குடி- 9445000366
5.முதுகுளத்தூர்- 9445000367
6.கடலாடி- 9445000368
7.கமுதி- 9445000369
*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 14, 2026
இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.


