News September 19, 2025

ராம்நாடு: ஒரே இடத்தில் 2வது விபத்து.. 2 பேர் பலி!

image

சாயல்குடியில் இருந்து கமுதி, செல்லும் சாலையில் உள்ள திட்டங்குளம், அருகே மணிவலை விளக்கு, பகுதியில் (செப், 18) மீண்டும் விபத்து நிகழ்ந்து. இதில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பும் அதே இடத்தில் பைக் மீது மினி லாரி மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை இங்கு மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 19, 2025

ராம்நாடு: இலவச லேப்டாப், மாதம் ரூ.1000! உடனே சேருங்கள்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், திருஉத்தரகோசமங்கையில் உள்ள அரசு ஐ.டி.ஐ-களில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று சேரலாம். இங்கு தகுதியான மாணவர்களுக்கு மாதம் உதவித்தொகை ரூ.750, ரூ.1000, லேப்டாப் வழங்கப்படும். இங்கு வேலைவாய்பபுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News September 19, 2025

ராம்நாடு: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY NOW

image

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை. இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

இராமநாதபுரம் தபால் சேவை குறைதீர் கூட்டம்

image

இராமநாதபுரத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற செப்.20ம் தேதி தபால் சேவை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. தபால் அனுப்பியதில் குறைப்பாடுகள் இருந்தாலும், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் மனு கொடுத்திருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், உங்களது வேறு குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.

error: Content is protected !!