News July 27, 2024

ராம்நாடு: இலங்கை மீனவர்கள் விடுதலை

image

தூத்துக்குடி கடலோர காவல்படையினர் கடந்த மே மாதம் எல்லை தாண்டி வந்த இலங்கை படகை பறிமுதல் செய்து மீனவர்கள் 7 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி கலெக்டர் பரிந்துரையின் பேரில் 7 பேரையும் ராமநாதபுரம் நீதிபதி மோகன்ராம் நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Similar News

News August 15, 2025

ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சோதனை ஓட்டம்

image

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சிறப்பு ரயில் ஓட்டம் நடைபெற உள்ளதால் ரயில்பாதையை யாரும் கடக்க கூடாது எனவும் 25000 மின்னழுத்த பாதையில் யாரும் நீண்ட கம்பு உலோகங்களாலான பொருட்களை அருகே கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே தெற்கு வாரியம் அறிவித்துள்ளது.

News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

News August 14, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு ஆக. 29 வரை நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள், எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (14-08-2025) மன்னார் நீதிமன்றத்தில் ஐந்தாவது முறையாக விசாரணைக்கு வந்தது. கைரேகை ஒத்துப்போகாததால், நீதிபதி 16 மீனவர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!