News April 3, 2026

ராம்நாடு: இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்.!

image

சின்னஅரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமியின் மனைவி சரோஜா (55). நேற்று காலை அவர் காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முற்பட்டபோது, அந்த இடம் பக்கத்து கிராமமான பழங்குளம் கிராமத்திற்குச் சொந்தமானது எனக் கூறி அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News

News April 3, 2026

ராமநாதபுரம்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

image

ராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News April 3, 2026

ராம்நாடு: 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நேற்று, பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

News April 3, 2026

ராம்நாடு: ஈரான் தாக்குதலில் பலியான இளைஞர் உடல் தகனம்

image

முதுகுளத்தூர் அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 36). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் சந்தான செல்வத்தின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

error: Content is protected !!