News September 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது வழக்கு இன்று ஆறாவது முறையாக ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிட்டு உத்தரவிட்டார்.
Similar News
News September 19, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபதாரத்துடன் விடுதலை

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை.02 அன்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தும் வரை மீன்வர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
News September 19, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News September 18, 2025
BREAKING: பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

ராமநாதபுரம் அருகே ஏந்தல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). பார்த்திபனூர் காமாட்சி நகரில் வசித்த இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இன்று (செப்.18) மாலை 5 மணியளவில் மிதமான மழை பெய்தது. அப்போது வேலை விஷயமாக மேலப்பெருங்கரை சென்ற ரமேஷ், நாடக மேடை அருகே புளியமரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.