News October 10, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை மன்னார் நீதிமன்றத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அடுத்து 30 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News October 10, 2025

ராம்நாடு: ஆன்லைன் மோசடி ரூ.51,000 மீட்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.

News October 10, 2025

ராம்நாடு: அ­ர­சு ஐ.டி.ஐயில் பயிற்­சி மு­காம் அறிவிப்பு

image

ப­ரமக்­குடி அரசு ஐ.டி.ஐயில் பிரதம மந்­திரி­ தே­சிய­ தொ­ழிற்­ பழகுநர் பயிற்­சிக்­குரிய­ தேர்வு முகாம் (அக்.13) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 5க்கும் மேற்­பட்­ட அரசு நிறு­வ­னங்­கள், 50க்கும் மேற்­பட்­ட தனியார் நிறு­வ­னங்கள் நேரடியா­க­ ப­யிற்சியா­ளர்களை தேர்வு செய்ய உள்­ள­தால், க­லந்­து
கொண்டு­ ப­யன்­பெ­றுமா­று கலெக்டர் சிம்­ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

இராமநாதபுரம்: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

இராமநாதபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!