News July 13, 2024

ராமேஸ்வரம் கோவில் மோசடி விசாரணை ஒத்திவைப்பு

image

ராமேஸ்வரம் கோவில் ஊழியர்களின் சேமநலநிதி கணக்கில் ரூ.1கோடி மோசடி நடந்தது. சிபிசிஐடி போலீசார் இணை ஆணையர் செல்வராஜ், கணினி ஆபரேட்டர் சிவனருள்குமரன், அவரின் தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் 4 பேர் மீதான விசாரணை நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Similar News

News September 11, 2025

ராமநாதபுரம்: இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்

image

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.SHARE பண்ணுங்க.

News September 11, 2025

தவில் நாதஸ்வரம் பயிற்சிப்பள்ளி சேர்க்கை

image

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.

News September 11, 2025

ராமநாதபுரம் பாஜக ஊடக பிரிவு செயலாளர் நியமனம்

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊடகப் பிரிவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் (செப்.10) ராமநாதபுரம் ஊடக பிரிவு செயலாளராக ஜெ குரு, பாஜக தலைமை கழகம் மாநில தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ள அவருக்கு அனைத்து பாஜக தொண்டர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!