News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைந்த வேலூர் போலீசார்

image

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி வருகிற 6-ம் தேதி வருகிறார். எனவே பிரதமர் வருகையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து 30 போலீசார் மற்றும் வேலூர் வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் 5 பேர் என மொத்தம் 35 பேர் 2 குழுக்களாக ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அங்கு 3 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என எஸ்பி மதிவாணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 13, 2025

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 153 மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் ,சேர்த்தல், திருத்தம், மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 153 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 13, 2025

வேலூர் டிஐஜி தலைமையில் ஆய்வு கூட்டம்!

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஐஜி தர்மராஜ் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ஆலோசிக்கப்பட்டது. இதில் எஸ்.பி மயில்வாகனன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!