News December 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News December 21, 2025
ராமநாதபுரம் கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://voters.eci.gov.in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
இராம்நாடு: அதிமுகவில் இருந்து நீக்கம்; திமுக சென்ற நிர்வாகிகள்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூர் அதிமுக செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் சீனி காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச்செயலாளர் பக்கர், மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோர் நேற்று (டிச.20) அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பின் கனிமொழி எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
News December 20, 2025
ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்க மாவட்ட அதிகாரியை 04657-230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.


