News September 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (செப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என்று காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News September 14, 2025
பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக ராமநாதன்

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் பாஜக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக மாநில மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராமநாதன் என்பவருக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை பாஜக மாநில மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா இன்று (செப்.13) அறிவித்துள்ளார்.
News September 13, 2025
ராமநாதபுரம் மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <
News September 13, 2025
அச்சத்தில் திருவாடனை பகுதி மக்கள்

திருவாடானையில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வட்டிடுராதா தெருவில் ஏ.டி.எம். முன் நாய்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் நாய்களால் விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள், உள்ளாட்சி அதிகாரிகள் நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.