News January 25, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று(ஜன.24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 24, 2026
இராம்நாடு: அணி மாறும் எம்.பி; வலுக்கும் போட்டி!

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி தர்மர், அதிமுகவில் இன்று இணைய உள்ளார் என தகவல். முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.பி தர்மர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்-க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் கடும் போட்டி உருவாகலாம்!
News January 24, 2026
இராம்நாடு: போஸ்ட் ஆபீஸில் வேலை!

இராம்நாடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
News January 24, 2026
ராம்நாடு: பெரியப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவர் கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் (39). இவர் இடப்பிரச்சனை காரணமாக 2021ம் ஆண்டு தனது பெரியப்பா முனியசாமியை (85) கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் போலீசார் முருகவேலை கைது செய்தனர். இது தொடர்பாக பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் முருகவேலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீர்ப்பு அளித்தார்.


