News January 18, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News January 22, 2026
BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
பரமக்குடி காவலருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் என்பவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனையாளர் உலக சாதனை புத்தகம் என்ற அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறந்த பொது சேவை புரிந்தமைக்காக, சிறப்பு சேவை சுற்றுச்சூழல் பணிப்பெண் விருது வழங்கி பாராட்டினர்.
News January 22, 2026
ராம்நாடு : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

இராமநாதபுரம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


