News January 9, 2026

ராமநாதபுரம்: 7330 பேர் விபத்தில் சிக்கினார்கள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு 108 அவசர ஊர்தி மூலம் 43,413 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி விபத்தில் சிக்கியவர்கள் 7330, கர்ப்பிணிகள் 14643, இருதயம் பாதிப்பு 2656, சுவாச பிரச்னை 1836, வாதப் பிரச்னை 736, பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் 381 பேர் என மொத்தம் 43,413 பேர் பயன் அடைந்துள்ளதாக இராமநாதபுரம் மாவட்ட 108 சேவை மேலாளர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 3, 2026

ராம்நாடு : இனி டாக்டர் பீஸ் FREE..!

image

இராமநாதபுரம் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <>கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News February 3, 2026

ராம்நாடு : விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி பலி!

image

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அரசு மருத்துவமனை அருகே நேற்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை.

News February 3, 2026

இராமநாதபுரத்தில் ரூ. 2 கோடி கஞ்சா சிக்கியது எப்படி?

image

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் Q பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், இலங்கைக்கு கடத்த முயன்ற 194 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்ட இதன் மதிப்பு ரூ. 2 கோடியாகும். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் வழியாக இதை கடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!