News September 13, 2025
ராமநாதபுரம்: வீணாகிய ரூ.57 கோடி திட்டம்

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தம் அருகே விடுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதை விர்க்க 2021ல் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து 2 மாதங்களுக்கு முன்பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் நேற்று மீண்டும்அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது.
Similar News
News September 13, 2025
ராநாதபுரம்: கரையில் கிடந்த ஆடை குளத்தில் துடிதுடித்து போன உயிர்

பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார்.அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். உடலை கைபற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 13, 2025
ராமநாதபுரம் :ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ராமநாதபுரம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 13, 2025
செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.