News November 27, 2025
ராமநாதபுரம்: விவசாயி கொலை வழக்கில்.. 10 ஆண்டு சிறை

கடலாடி தாலுகா கண்ணன் புதுவன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 45. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 45.இவர்களுக்குள் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் 2022 மார்ச் 3ல் சத்தியமூர்த்தி சீமைக் கருவேல மரக்கட்டையால் சுப்பிரமணியனை அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பாலமுருகன் நேற்று சத்தியமூர்த்திக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் விதித்தார்.
Similar News
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை ரயில்கள் இயங்காது

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் ரயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28.11.2025) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார் என ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE செய்து தெரியப்படுத்துங்க.


