News October 16, 2025

ராமநாதபுரம்: மீன் வலைகளை உலர்த்திய மீனவர் பரிதாப பலி

image

தேவிபட்டினம் ஆர்.சி.தெருவை சேர்ந்த சவேரியார் மகன் சவேரி கிளின்டன் 27. மீனவரான இவர் நேற்று காலை வீட்டின் கூரையில் மீன்பிடி வலைகளை உலர்த்தி உள்ளார். மழை பெய்த நிலையில் வலைகளை அப்புறப்படுத்திய போது அந்த பகுதி வழியாகச் சென்ற மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கிளின்டனை தேவிபட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.

Similar News

News October 16, 2025

ராமநாதபுரம்: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 16, 2025

BREAKING: ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதி மழையின் நிலைக்கேற்ப பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

ராமநாதபுரம்: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!