News April 3, 2025
ராமநாதபுரம் -செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 11.45 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஏப்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Similar News
News April 10, 2026
இராம்நாடு : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 APPLY.!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 10, 2026
இராமநாதபுரம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 66 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி முதுகுளத்தூர் தொகுதியில் 20 பேரும், இராமநாதபுரம் தொகுதியில் 13 பேரும், திருவாடானை தொகுதியில் 21 பேரும், பரமக்குடி (தனி) தொகுதியில் 12 பேரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
News April 10, 2026
பரமக்குடி அருகே தீயில் கருகி 32 உயிர்கள் பலி.!

பரமக்குடி அருகே புதுக்குடியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி, அவரது வயலில் நெல் அறுவடை முடிந்ததால் வயலுக்கு தீ வைத்தார். அருகே இருந்த, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் வயலில் தீ மெல்ல மெல்ல பரவியது. அங்கு 32 செம்மறி ஆடுகள் கிடையில் அடைக்கப்பட்டிருந்தன. பரவிய தீயால் 32 செம்மறி ஆடுகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகின. முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


