News August 5, 2025

ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் அரசு நிலத்தில் வசிப்போர் (அ) நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் (அ) வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க

Similar News

News August 5, 2025

ராமநாதபுரத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

image

எமனேஸ்வரம், துறைமுகம் (ராமேஸ்வரம்), பாம்பன், திருப்புல்லாணி, திருஉத்திரகோச மங்கை, பேரையூர், இளம்செம்பூர், எஸ்பி பட்டினம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தர நிலை உயர்த்தி கவர்னர் உத்தரம்படி அரசின் கூடுதல் தலைமை செயல தீரஜ்குமார் நேற்று ( 04.8.2025) அரசாணை பிறப்பித்துள்ளார்.

News August 4, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News August 4, 2025

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தற்போது விநாடிக்கு ஆயிரத்து 594 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. விரைவில் 69 அடியை எட்டிவிடும். இந்நிலையில் 3ஆம் கட்ட அபாய எச்சரிக்கைக்குப் பிறகு எந்நேரமும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!