News September 11, 2025
ராமநாதபுரம்: இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தம்

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை வழியாக மதுரை செல்லும். ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் மட்டும் பஸ் போக்குவரத்து இருக்கும் என போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.SHARE பண்ணுங்க.
Similar News
News September 11, 2025
பரமக்குடியில் வீடுகளில் புகுந்த மழை நீர்

பரமக்குடி நகராட்சி 12வது வார்டு ஜி.வி.பந்த் தெருவில் முறையற்ற வாறுகால் காரணமாக கனமழையில் 10க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வீடுகளுக்குள் மழை, கழிவுநீர் புகுந்து தொழில் பாதிப்பு ஏற்பட்டது. முன்னர் வாறுகால் சீரமைப்பு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக நகராட்சி பதிலளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மனு அனுப்பினர். நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 11, 2025
ராமநாதபுரத்தில் குவிந்துள்ள போலீஸ் பட்டாளம்

பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்7000 போலீசார்,52 கண்காணிப்பு வாகனங்கள்,38 சோதனைச்சாவடிகள், 500சிசிடிவி,3 100 கேமராக்கள்(ம) 3வாகன நிறுத்துமிடங்கள் பாதுகாப்பில் உள்ளனர். டிரோன் மூலம் நேரலை கண்காணிப்பு நடைபெறுகிறது. அனுமதியின்றி வந்த டூவீலர்,வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.15 டாக் ஸ்குவாடுகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News September 11, 2025
பரமக்குடி அருகே அரசு பஸ் மோதி விபத்து

பரமக்குடி அருகே கமுதக்குடி என்ற இடத்தில் மதுரை 4 வழிச்சாலையில் கருவேல மரங்களை அரைக்கும் இயந்திரத்தை வெங்காளூரை சேர்ந்த ஓட்டுநர் விஜயகுமார் ஊரக்குடிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் சென்ற அரசு பேருந்து அந்த வண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கருவேலம் மரங்களை அரைக்கும் இயந்திரம் முற்றிலும் சேதமானது.