News September 3, 2025
ராமநாதபுரம்: ஆட்சியர் தகவல் அறிவிப்பு

ராமநாதபுரம், (செப்.9) முதல் அக்டோபர் 31 வரை 163-BNSS தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு நாள் (செப்.11) மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை (அக்.28,30) காரணமாக, சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு அமல் படுத்தப்படுகிறது. வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
Similar News
News September 4, 2025
ராம்நாடு: மக்களே இந்த நம்பர்கள் ரெம்ப முக்கியம்!

▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் SMS அனுப்ப – 9840983832
▶️கடலோர பகுதியில் அவசர உதவி-1093
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News September 3, 2025
ராமநாதபுரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

ராமநாதபுரம், இயங்கும் அனைத்து உணவகங்களை இயக்கி வரும் உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களின் வகை தரத்திற்கு ஏற்ப உணவு பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தர சான்றிதழ் நிச்சயமாக பெற்று இருக்க வேண்டுமென அறிவிப்பு செய்துள்ளார். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியிட்டுள்ளார்.
News September 3, 2025
இராமநாதபுரம்: எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று, உடனுக்குடன் தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.