News December 10, 2025
ராமநாதபுரம்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

ராமநாதபுரம் லட்சுமிபுரம் மேல்கரை பகுதியில் உள்ள பேராவூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கருவேல மரங்களுக்குள் ஒரு பெண் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கேணிக்கரை போலீஸார் அப்பெண்ணின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் வயது 50 இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 11, 2025
BREAKING: பரமக்குடியில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது

பரமக்குடியைச் சேர்ந்த ஒருவர் எஸ்.அண்டக்குடியில் உள்ள இடத்தை வரன்முறைப்படுத்தல்(பிளாட் அமைக்க) கட்டணம் செலுத்தி, உள்ளாட்சி அனுமதி அளிக்க பரமக்குடி துணை BDO இளங்கோவனை அணுகினார். இதற்கு அனுமதியளிக்க இளங்கோவன் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின் மனுதாரர் ஊழல் தடுப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி, ரூ.50,000 பணத்தை இளங்கோவன் கொடுத்துள்ளார். லஞ்சம் பெற்ற இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.
News December 11, 2025
ராமநாதபுரத்தில் EB கட்டணம் அதிகமா வருதா?

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
ராமநாதபுரம்: அதிமுக MLA சீட்…. முக்கிய அறிவிப்பு

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி (தனி) , திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் டிச.23க்குள் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


