News December 20, 2025
ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவனுக்கு பீர் பாட்டில் குத்து

திருப்புல்லாணி அருகே அரசு பள்ளியில் 11th படித்து வரும் வள்ளிமாடன் வலசையை சேர்ந்த 16வயது மாணவருக்கும் அருகே உள்ள செல்வனுார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும் முன் விரோதம் இருந்தது. வள்ளிமாடன் வலசையை சேர்ந்த மாணவரின் அண்ணன் ரோகித் 18, செல்வனுார் மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து செல்வனுார் மாணவர் கழுத்தில் ரோகித் குத்தினார். போலீசார் விசாரிகின்றனர்.
Similar News
News December 21, 2025
ராமநாதபுரம்: டூவிலர் கார் மோதி ஒருவர் பலி

இராமநாதபுரம் – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (டிசம்பர். 20) இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனம் மீது பொலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
ராமநாதபுரம்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 21, 2025
ராமநாதபுரம் கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://voters.eci.gov.in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


