News March 22, 2025
ராமநாதபுரத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நாளை (மார்ச்.23) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீர் தின கருப்பொருள், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, தூய குடிநீர் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.06) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 24.02 மில்லி மீட்டர், இராமேஸ்வரத்தில் 20 மில்லி மீட்டர், மண்டபத்தில் 17.02 தங்கச்சிமடத்தில் 10.04 மில்லி மீட்டர், முதுகுளத்தூரில் 2 மில்லி மீட்டர், கமுதியில் 02.08 மில்லி மீட்டர், பரமக்குடி 02.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. *ஷேர்
News April 7, 2025
தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 7, 2025
ராமநாதபுர இளைஞர்களுக்கு வேலை ரெடி

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட விற்பனை பிரிவு நிர்வாகி பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <