News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
ராம்நாடு: மக்கள் குறை தீர் நாள் கூட்டம்: 317 பேர் மனு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (நவ.3) நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும், குடிநீர் இணைப்பு கோரி 317 பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.
News November 3, 2025
ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
News November 3, 2025
ராம்நாடு: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி!

ராம்நாடு மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.


