News March 14, 2025
ராணுவ கல்லூரியில் பயில்வதற்கு திருவாரூர் கலெக்டர் தகவல்

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு ஜுன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெற்றோர் (அ) பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராக 13 வயது அடையாதவராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW..
Similar News
News July 7, 2025
திருவாரூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
திருவாரூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.