News August 26, 2025

ராணிப்பேட்டை: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

Similar News

News August 26, 2025

ராணிப்பேட்டையில் துவக்கி வைத்த அமைச்சர்

image

மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து ராணிப்பேட்டை, வி.ஆர்.வி அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி துவக்கி வைத்தார். பின், மாணவர்களுடன் காலை உணவை உட்கொண்டார்.

News August 26, 2025

ராணிப்பேட்டையில் வேலை

image

ராணிப்பேட்டை இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு மாத ஊதியம் ரூ.11,916 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04172-299347 என்ற எண்ணை அழைக்கவும்.

News August 26, 2025

ராணிப்பேட்டை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) தொடங்குகிறது. ராணிப்பேட்டையில் உள்ள பல்வேறு மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில் கைப்பந்து போட்டி, கால்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், நீச்சல், கபடி, தடகளம், கேரம் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது .

error: Content is protected !!