News November 5, 2025

ராணிப்பேட்டை: 16,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!!

image

தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு துறை நேற்று (நவ.04) சமூக வலைதளத்தில் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 16 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொரு மாதம் தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை பெற்று பயன்பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News November 5, 2025

ராணிப்பேட்டை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News November 5, 2025

ராணிப்பேட்டை: 4 ஆண்டுகளில் 8 கோடி இலவச பயணங்கள்

image

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8 கோடி பயணங்கள் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மேற்கொண்டுள்ளனர்”. என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

ராணிப்பேட்டையில் 1,70,000 மகளிருக்கு உரிமை தொகை

image

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் கடந்த 26 மாதங்களாக சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் மகளிர், ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் பயன்பெற்று வருகின்றனர்”. என தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!