News November 23, 2025

ராணிப்பேட்டை: விவசாயி விஷம் அருந்தி தற்கொலை

image

நெமிலி கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் தனது மகளின் திருமணத்திற்கு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் கடன் வங்கியிருந்தார், அதை சில மாதங்கள் கட்ட முடியாத நிலையில் நிதி நிறுவனத்திலிருந்து பெருமாள் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த பெருமாள் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News November 23, 2025

ராணிப்பேட்டை: மோசமான சாலையா? இங்கு புகார் செய்யலாம்

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<> “நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணு

News November 23, 2025

கலவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

image

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் டிசம்பர் 6ம் தேதி சனிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது சுமார் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு 94 884 664 68 ல் தொடர்பு கொள்ளலாம்.

News November 23, 2025

ராணிப்பேட்டை: இரவு நேரக் காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று(நவ.22) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!