News November 6, 2025

ராணிப்பேட்டை: விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நவ.7ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகிக்கிறார். வேளாண் தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் இன்று (நவ.06) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 6, 2025

ராணிப்பேட்டை: அபாயகரமான வேகத்தடைக்கு தீர்வு!

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் தொடர்ந்து வேக தடைகளின் மீது வெள்ளை பெயிண்ட் இல்லாததால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் இன்று (நவ.06) அப்பகுதியில் நெடுஞ்சாலை பணியாளர்கள் வேகத்தடைக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News November 6, 2025

ராணிப்பேட்டை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 6, 2025

ராணிப்பேட்டை பெண்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (நவ.06) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக காவல்துறையால் பெண்கள் பாதுகாப்பிற்காகவும், உடனை புகார் அளிக்கவும் உருவாக்கப்பட்ட காவல் உதவி கைபேசி செயலி பதிவிறக்கம் செய்ய குறியீட்டினை ஸ்கேன் செய்யவும் என அறிவுறுத்தப்பட்டது. பின் செயலியை பதிவிறக்கம் செய்து இன்றைய உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று மாவட்ட காவல்துறை செய்தியில் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!