News September 7, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

ராணிப்பேட்டை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News September 8, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.,7) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
ராணிப்பேட்டையில் பயிர் விளைச்சல் போட்டி!

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
ராணிப்பேட்டையில் சனி தோஷம் நீங்க இங்க போங்க!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மா பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மங்கள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பே சனீஸ்வரர் திருகல்யாண கோலத்தில் இருப்பதுதான். இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.