News December 31, 2025
ராணிப்பேட்டை: ரயில் மோதி திருநங்கை பரிதாப பலி!

புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்று டிச.30ம் தேதி திருநங்கை ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். ரயில்வே போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் திருநங்கை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த திருநங்கை கந்தவேல் கவிதா என்பது தெரிந்தது. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ரயில் மோதி இறந்தாரா என ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 22, 2026
ராணிப்பேட்டை: ரேஷன் அட்டையில் திருத்தமா? அரிய வாய்ப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் வரும் ஜனவரி 24-ம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெரும் இந்த முகாமில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் செய்து தரப்படும். இதுதவிர பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் மக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
ராணிப்பேட்டை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஜன 26-ந் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


