News November 7, 2025
ராணிப்பேட்டை: ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்!

ராணிப்பேட்டை: ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் – ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று நேற்று(நவ.6) காணப்பட்டது. இதுகுறித்து தகவ அறிந்ததும் சம்ப இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 7, 2025
ராணிப்பேட்டை: திருமணத்திற்கு இலவச தங்கம், நிதி பெறுவது எப்படி?

1) ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2)இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3)திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.
4)திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.(SHARE IT)
News November 7, 2025
அரக்கோணம்: டிக்கெட்டின்றி பயணித்த 17 பேர்!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று(நவ.6) டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ததாக 17 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.5000 அபராதமாக வசூலிக்கப்பட்டது .இந்த அதிரடி சோதனை தினமும் தொடரும் என்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில் தெரிவித்தார்.
News November 7, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


