News February 10, 2026
ராணிப்பேட்டை முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 12, 2026
ராணிப்பேட்டை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.
News February 12, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் இளைஞர்களுக்கு புதிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.


