News March 22, 2024
ராணிப்பேட்டை: மீறினால் கடும் நடவடிக்கை!

அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
Similar News
News February 17, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் துடிதுடித்து பலி!

திருமலைச்சேரியை சேர்ந்த தனியார் கம்பனி ஊழியர் பிரவீன்குமார் (21). இவர் நேற்று (பிப்.16) அதிகாலை வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு NH -ல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 17, 2026
ராணிப்பேட்டை: தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம்!

அம்மனூர் சிப்காட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று (பிப்.16) வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் சென்னை தனியார் வங்கியில் பணியாற்றும் கஜபதி (41) என்பது தெரிந்தது. இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 17, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப். 16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


