News March 27, 2024
ராணிப்பேட்டை: மரக்கட்டைகள் எரிந்து நாசம்

ராணிப்பேட்டை அருகே தனியாருக்கு சொந்தமாக மரக்கட்டைகள் சேமித்து வைக்கும் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் 2:30 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
Similar News
News February 19, 2026
ராணிப்பேட்டை: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!
News February 19, 2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை விரிவாக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிகள் நடைபெறும் பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மாற்றுப்பாதைகள் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.
News February 19, 2026
ராணிப்பேட்டையில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.


