News December 27, 2025
ராணிப்பேட்டை: மயங்கி விழுந்த தொழிலாளி மர்ம சாவு!

ராணிப்பேட்டை, கத்தியவாடி சாலையை சேர்ந்தவர் கே. ராஜா (வயது 56). அப்பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இவர், நேற்று (டிச.27) அங்குள்ள தோல் கழிவு தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார். இதனால் உறவினர்கள் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று தொழிற்சாலை நுழைவு வாயில் முன் ராஜாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News December 28, 2025
முன்னாள் எம்எல்ஏ வீட்டின் மீது கல்வீச்சு வாலிபர் கைது

அரக்கோணம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பவானி கருணாகரன். தோல் ஷாப் பகுதியில் வசிக்கிறார். நேற்று இரவு இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சின்னராசு தனது தாயுடன் சண்டை போட்டார். சண்டையை விலக்கி விடுமாறு பவானி கருணாகரனிடம் சின்னராசு கேட்டார். அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் எம்எல்ஏ வீட்டின் மீது ஆத்திரம் அடைந்து கல் வீசி உள்ளார். இதனால் சின்னராசுவை டவுன் போலீசார் இன்று (டிச.28) கைது செய்தனர்.
News December 28, 2025
ராணிப்பேட்டை: மத்திய அரசில் வேலை அறிவிப்பு.. Salary ₹69,100!

1. எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு கோட்டாவின் கீழ் 549 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,200 முதல் ரூ.69,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜன.15. நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News December 28, 2025
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா? CLICK

ராணிப்பேட்டை மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <


