News January 21, 2026
ராணிப்பேட்டை: பெண்ணுக்கு எமனாய் வந்த வாகனம்!

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பெண் யார்? மோதிய வாகனம் யாருடையது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
ராணிப்பேட்டை: லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

ராணிப்பேட்டை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!
News February 8, 2026
ராணிப்பேட்டை: வாங்கியதும் பிரச்சனை; கைவிரித்த HP!

ராணிப்பேட்டையை சேர்ந்த குமரன், கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் டிஜிட்டல் ஷோரூமில் ரூ.50,000-க்கு HP laptop வாங்கி உள்ளார். அனால் வாங்கி 7 மாதத்திற்குள் laptop repair ஆகியது. இதுகுறித்து புகார் அளித்தும் ஷோரூம் நிர்வாகிகள் மற்றும் HP Care centre முறையான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து விட்டு, தற்போது waranty முடிந்துவிட்டது என கை விரித்துள்ளனர். இது பற்றிய அவரின் கதறல் Viral-ஆகி வருகிறது.
News February 8, 2026
அரக்கோணத்தில் துணிகர சம்பவம்!

அரக்கோணம் சாஸ்திரி நகரை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார், சத்தியவாணி. இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்ற சத்த்யவாணி, வந்து பார்த்த போது பீரோ அருகே நகைகள் கீழே விழுந்து இருந்ததாம். மேலும் பீரோவில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து புகார் பெற்ற அரக்கோணம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


