News April 14, 2025
ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெறும்.
Similar News
News August 7, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நாளை ஆகஸ்ட் 7 கீழ்க்கண்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் நேரம் காலை 9மணி முதல் மாலை 3மணி வரை. மேல்விஷாரம் MMES விழா மண்டபம் அண்ணா சாலை, வாலாஜா CM மஹால் டி இராமசாமி தெரு, தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் ஒன்றியம் பஞ்சாயத் அலுவலகம் கட்டிடம், ஆற்காடு சமுதாயக்கூடம் புதிய தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.
News August 6, 2025
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

இன்று (06.08.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இரவு நேர கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபபிரிவுகளில் காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் போலீசார் சிறப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவிதத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்துகொல்லாம்.
News August 6, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் புதிய அறிவிப்பு

இன்று ஆகஸ்ட் 6 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெய் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்திற்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.