News December 25, 2025
ராணிப்பேட்டை: பன்றி கடித்து ஐந்து வயது சிறுமி படுகாயம்

தாஜ்புரா ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், இவரது மகள் சிவானி 5 இவர் தனது வீட்டின் அருகே இன்று (டிசம்பர் 25)ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது பன்றி கூட்டம் ஒன்று திடீரென அந்த வழியாக வந்தது. அதிலிருந்து ஒரு பன்றி சிவானியை முகம் உடல் என பல இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Similar News
News December 29, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் நாளை (டிச.30) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இதில், நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சேவை குறைபாடுகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
ராணிப்பேட்டை: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. வரும் 2026யில் தொடங்கும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து புதியதாக ஒரு கலையை கற்பதாக புத்தாண்டை தொடங்குங்கள். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 29, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் தொழிலாளி பலி!

வாலாஜாவை அடுத்த பூண்டி கிராம மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம்(65). கட்டட தொழிலாளியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி இரவு அங்குள்ள குளத்து தெருவில் சாலையைக் கடந்த போது பைக் மோதி பலத்த காயமடைந்தார். அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று(டிச.28) பலனின்றி உயிரிழந்தார்.


