News September 11, 2025

ராணிப்பேட்டை: தாய், மகன் விபரீதம்

image

அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்தவர் மதன சேகர் (54). விபத்தில் சிக்கியதால், தன்னை கவனிக்க யாரும் இல்லாத மனவேதனையில், தனது தாயார் புனிதவதி (72) உடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்னையில் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 11, 2025

ராணிப்பேட்டை: ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 11, 2025

ராணிப்பேட்டை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

ராணிப்பேட்டை: மாதம் ரூ.1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!