News September 13, 2025

ராணிப்பேட்டை: சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி

image

ராணிப்பேட்டை, வாலாஜாவைச் சேர்ந்த செந்தில்நாதன் (44) என்பவர் டியூஷனில் படித்த 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த அவரை, திருச்செந்தூரில் சாமியார் வேடத்தில் திரிந்தபோது போலீசார் கைது செய்தனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

ராணிப்பேட்டையில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் மற்றும் ₹600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவை வேண்டும். கல் அல்லது தார்சு கட்டிடங்களில் மட்டுமே கடைகள் அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளார். ஷேர்

News September 13, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் செய்ய இன்று (செப்.13) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்யப்படும். இதில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

ராணிப்பேட்டையில் சொத்துக்காக தம்பியை கொன்ற அண்ணன்

image

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தம்பி பச்சையப்பனை தாக்கி கொலை செய்த அண்ணன் மனோகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று (செப்.12) தீர்ப்பளித்தது. நிலத் தகராறு காரணமாக 2015ஆம் ஆண்டு பச்சையப்பனை கொன்ற வழக்கில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயமங்கலம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தார்.

error: Content is protected !!