News April 29, 2024
ராணிப்பேட்டை: கோயிலுக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா, டி.சி.குப்பத்தை சேர்ந்தவர் சத்யா. முன்னாள் ராணுவ வீரரான இவர் குடும்பத்துடன் நத்தம் மலைப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு நேற்று(ஏப்.28) சென்றுள்ளார். அப்போது சத்யாவின் மூத்த மகன் ஹர்ஷன் (14) திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை டோலி கட்டி மருத்துவமனை கொண்டு வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூச்சு திணறலால் இறந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
இரா.பேட்டை: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்…!

இராணிப்பேட்டை மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <
News August 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி (28/08/2025) காலை 11 மணி முதல் மாலை 5 மணி நேர வரை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள் தங்கள் பொது மற்றும் தனிநபர் பிரச்சினைகளை கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News August 23, 2025
ராணிப்பேட்டை: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1,446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <