News April 24, 2024
ராணிப்பேட்டை: கோடையில் சீரான குடிநீர் – ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகம் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஏப்.22) நடைபெற்றது. ஆட்சியர் வளர்மதி, டிஆர்ஓ சுரேஷ், திட்ட இயக்குநர் லோகநாயகி, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 2, 2026
ராணிப்பேட்டை: அமைச்சர் தலைமையில் நிகழ்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News January 2, 2026
ராணிப்பேட்டை: தொழில் தொடங்க நினைப்பவர்கள் இங்கு போங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பால முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14 -ஆம் நூற்றாண்டில் அமையப்பெற்ற பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலுக்கு வந்து தரிசிப்பதின் வழியே முருகரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த கோயிலில் தரிசித்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர்.
News January 2, 2026
ராணிப்பேட்டை: 10th போதும் வங்கியில் வேலை APPLY NOW!

ராணிப்பேட்டை மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <


