News September 24, 2025

ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி! அதிர்ச்சி சம்பவம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைபாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் மிதுன். காவனூர் தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் இவர் நேற்று மதியம் பள்ளியில் மதிய இடைவேளையின் போது கேக் சாப்பிட்டுள்ளார். அதன்பின் திடீரென சிறுவன் முகம் வீங்கி மயக்கமடைந்தார். சிறுவனை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News September 24, 2025

ராணிப்பேட்டை: கேக் சாப்பிட்ட சிறுவன் பலி உறவினர்கள் மறியல்

image

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் தாமரைப்பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் இமயவர்மன் சிறுவனின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

News September 24, 2025

ராணிப்பேட்டை: வரதட்சனையால் பெண் தற்கொலை?

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், தண்டலத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி நிவேதா. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நிவேதாவை வரதட்சனை கேட்டு வினோத் கொடுமை செய்ததாகவும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி நிவேதா உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டதில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News September 24, 2025

ராணிப்பேட்டை: வருகிறது தீபாவளி! உஷாரா இருங்க…

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் செயலிகள் மூலம் வரும் தள்ளுபடி இணைப்புகளை நம்பி பணபரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த இணைப்புகள் பெரும்பாலும் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது போன்ற மோசடி தொடர்பாக புகார் அளிக்க 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!