News August 7, 2025
ராணிப்பேட்டை: கூட்டுறவு வங்கிகளில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடக்கம் ரூ.23,640 முதல் அதிகபடியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <
Similar News
News August 10, 2025
ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதினைந்து இடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது http://drbrpt.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 29 தேதி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
News August 9, 2025
ராணிப்பேட்டை:இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100.
News August 9, 2025
ராணிப்பேட்டை: ரயிலை கடக்க முயன்ற போது மரணம்

பாணாவரம் பகுதியை சேர்ந்த ஒப்பந்த பணியாளரான ராஜேந்திரன் 51 நேற்று ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணம் வந்தபோது, ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்க முயன்று தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தனர். அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.