News August 23, 2024
ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

காவல்துறையில் பணியாற்றிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த குமார் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். மேலும் ராணிப்பேட்டையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளிர் இடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
சாலையின் தரத்தினை ஆய்வு செய்த ஆட்சியர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா நேற்று கலவை பேரூராட்சி புதுகாலனியில் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார். உடன் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அம்சா, வட்டாட்சியர் சரவணன். செயல் அலுவலர் ஜெய்குமார் மற்றும் பலர் உள்ளனர்.
News September 10, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ரோந்து பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இவர்களை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் ஆற்காடு நகராட்சியில் இந்திராணி ஜனகிராமன் திருமண மண்டபம், மேல்விஷாரம் நகராட்சியில் அண்ணாசாலை எச்.எம். ஆடிட்டோரியம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குப்புசாமி திருமண மண்டபம், சோளிங்கர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திமிரி வட்டாரத்தில் கனியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.