News April 25, 2024
ராணிப்பேட்டை: குழந்தைகளின் தந்தை குளத்தில் விழுந்து சாவு

ராணிப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் தயாளன்( 46 ).இவர் இன்று சென்னசமுத்திரத்தில் உள்ள தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது அருகில் உள்ள குளத்தில் விழுந்து இறந்தார் . இதுகுறித்து வாலாஜா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு தயாளனின் உடல் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு திலீபன் ,தேவிகா என 2 குழந்தைகள் உள்ளனர்.
Similar News
News April 19, 2025
ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்
News April 18, 2025
ராணிப்பேட்டை: பில்லி சூனிய பிரெச்சனையா இங்கு போங்க

ராணிப்பேட்டை அருகே வேலூர், சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், ஒரு நாழிகை 4 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிட்டிடும், பெருமை உடையது. பில்லி சூனியத்தை அடியோடு எடுக்கும் சிறப்பை பெற்றுள்ளது, பில்லி சூனியத்தால் அவதிப்படும் நபர்களுக்கு பகிரவும்.
News April 18, 2025
ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <