News January 30, 2026

ராணிப்பேட்டை: குரூப்-2 மாதிரி தேர்வு: நாளை முன்பதிவு!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் TNPSC Group 2 தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜனவரி.31) காலை 10 மணி முதல் இந்த தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 04172291400 எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 3, 2026

ராணிப்பேட்டையில் தூக்கில் தொங்கிய மாணவி!

image

கலவை, இருங்கூரை சேர்ந்த +1 மாணவி மதுமதி. நேற்று முன்தினம் மாணவிக்கு வீட்டில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இந்நிலையில் நேற்று (ஜன.2) வீட்டில் தனியாக இருந்த மதுமதி காலை 10 மணியளவில் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வாழைப்பந்தல் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்-02) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!