News October 21, 2025
ராணிப்பேட்டை: காவல்துறையில் வீர வணக்கநாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (அக்.21) காவலர் வீர வணக்க நாளை சிறப்பாகக் கொண்டாடினர். கடமையில் உயிர்நீத்த வீர காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல் நிலைய வளாகத்தில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்று வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர்.
Similar News
News February 10, 2026
ராணிப்பேட்டை முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.
News February 10, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
அரக்கோணம்: துரத்தி துரத்து கடித்த தெரு நாய்!

அரக்கோணம் அடுத்த மாதவ நகர் பகுதியில் நேற்று (பிப்.9) லட்சுமி அம்மாள் (60) பூ விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த தெருநாய் இவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. மேலும் அவ்வழியாக சென்று கொண்டிருந்த சிறுவன் பேரரசு (12) மற்றும் தந்தை தன்ராஜ் ஆகியோரையும் நாய் கடித்துள்ளது. தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


